Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 200 ஆண்டுகளை கொண்டாட இருக்கும் ... திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் விண்ணைப்பிளந்தது அரோகரா கோஷம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 நவ
2011
11:11

தூத்துக்குடி: ""வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பலலட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று மாலை ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.இக்கோயில் கந்தசஷ்டி திருவிழா அக்.,26ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை,மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளல் நடந்தது. ஆறாம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், காலை 6.30 மணியளவில் கடைசிகால யாகசாலை பூஜை நடந்தது. அங்கு தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர், தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் கந்தசஷ்டி விரத மண்பத்தில் எழுந்தருளினார். மாலை 3.10 மணியளவில் சூரன், கடற்கரைக்கு வந்தான். தீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், 4.35 மணியளவில் சூரசம்ஹாரத்திற்காக கடற்கரையில் எழுந்தருளினார். அங்கு கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் மாலை 5.51 மணிக்கு சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். பின்னர், சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை, சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். சம்ஹாரம் முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு, சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆறு நாள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை முடித்தனர். இரவில் சுவாமி- அம்பாள்களுக்கு சாயா அபிஷேகம் எனப்படும் நிழல் அபிஷேகம் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.திருச்செந்தூரில் நேற்று பகல் 11 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பின் மழையில்லாததால், சூரசம்ஹாரத்தை காணவந்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar