Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லை முருகன் கோயில்களில் ... திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசிவிசுவநாதர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
11:11

தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் காசிவிசுவநாதர், உலகம்மன் சன்னதிகளுக்கு மத்தியில் பாலமுருகன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முருகப் பெருமான் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். சூரன்களை எதிர்கொள்ள கீழரதவீதியில் சுவாமி தயாராக இருந்தார். அப்போது எதிர்வந்த சூரன்களை கீழரத வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதிகளில் சுவாமி வதம் செய்தார். இறுதியில் கீழரத வீதியில் மகா சூரனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றிய நிகழ்ச்சி நடந்தது. சூரன்களை போல் வேடமணிந்த பக்தர்கள் சுவாமியை வலம் வந்து தரிசனம் செய்தனர். அப்போது "வேல் வேல் முருகா... வெற்றி வேல் முருகா என பக்தர்களின் கோஷங்கள் விண்ணை முட்டியது. சிறப்பு தீபாராதனை நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.பாண்டியராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

* தென்காசி கீழப்புலியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று மதியம் பாலாபிஷேகம், உச்சிக்கால பூஜை நடந்தது. மாலையில் சப்பர வீதி உலா, வேல் வாங்குதல், தம்பிராட்டியம்மன் கோயில் வளாகத்தில் சூரசம்ஹாரம், முழுக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் இறுதி நாளான இன்று (1ம் தேதி) இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar