Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசிவிசுவநாதர் கோயிலில் ... கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்குமாரசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
11:11

கடையநல்லூர் : பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழியில் பிரசித்தி பெற்று விளங்கும் திருமலைக்குமார சுவாமி கோயில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருக்குமர ஸ்தலங்களில் ஒன்றாகும். முருக பக்தர்களால் 7ம் படை வீடாக வழிபட்டு வரும் திருமலைக்குமார சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 24ம் தேதி திருக்குமரனுக்கு சிறப்பு அலங்கார, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோயில் மலைப் பகுதியில் சுவாமி திருவீதியுலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் 7ம் திருநாளன்று உச்சிகால பூஜைக்குபின் சுவாமி மலையிலிருந்து வண்டாடும் பொட்டலுக்கு எழுந்தருளினார். பெருந்திருப்பாவாடை நிகழ்ச்சி எடுத்து வண்டாடும் பொட்டலுக்கு வருகை தந்த குமரனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு மலைக்கோயிலுக்கு சுவாமி புறப்பட்டார். தொடர்ந்து சண்முகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. நேற்று சஷ்டியன்று மதியம் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருக்குமரன் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வந்தார். அடிவாரத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பக்தர்களால் திருக்குமரன் சூரசம்ஹாரத்திற்காக அழைத்து வரப்பட்டார். அதனை தொடர்ந்து மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. சூரசம்ஹார விழாவில் பண்பொழி, கரிசல்குடியிருப்பு, செங்கோட்டை, வடகரை, நெடுவயல், அச்சன்புதூர், கடையநல்லூர், தேன்பொத்தை, சீவநல்லூர், இலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar