பதிவு செய்த நாள்
01
நவ
2011
11:11
கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (அக்.31) நடந்தது. இதையொட்டி செண்பகவல்லியம்மன் கோயில் காலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும், மூலவர் சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரத்திற்கு எழு ந்தருளல் நடந்த பின்னர் சுவாமி நான்கு ரதவீதிகள், மாதாங்கோயில் ரோடு, தெற்குபஜார், எட்டயபுரம் ரோடு வழியாக காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதையடுத்து மேளவாத்தியங்களுக்கு சூரர்கள் ஆணவத்துடன் ஆட்டம்போட, கஜமுகசூரன், சிங்கமுகசூரன், தாருகாசூரன், சூரபத்மன் ஆகிய நான்கு பேரையும் முருகன் வதம் செய்தார். சிறப்பு பூஜைகளை செண்பகராமன், சங்கரன், கோபாலகிருஷ்ணன், சுவாமிநாதன் ஆகிய பட்டர்கள் செய்தனர். விழாவில் மண்டகப்படிதாரர் ஆயிர வைசிய காசுக்கார செட்டியார் சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் ராஜசேகரன், பொ ருளாளர் சங்கரன், முன்னாள் கவுன்சிலர் சந்திரன், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.