Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரட்டூர் மாரியம்மன் கோவில் ... அம்மன் கோவிலை சூழ்ந்தது வெள்ளம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
11:11

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவில், நேற்று உற்சவர் சண்முக பெருமானுக்கு, 15 வகையிலான மலர்களால் புஷ்பாஞ்சலி நடந்தது.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த மாதம், 27ம் தேதி துவங்கியது. தினசரி புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், சந்தன காப்பு, திரு ஆபரணம், தங்க கவசம் போன்ற அலங்காரங்கள் நடந்தன. மலைக்கோவில் வளாகத்தில் தினசரி மாலை, பக்தி இன்னிசை கச்சேரிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன.கந்த சஷ்டியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில், புஷ்பாஞ்சலி நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை சேலம், கரூர் ஆகிய பகுதிகளிலிருந்து, 15 வகையான மலர்கள் லாரி மூலம் ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.பின்னர் பூக்கூடைகளை முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் தோளில் சுமந்து சரவணபொய்கை, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகப் பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.மாலை 6 மணிக்கு, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.இன்று கந்த சஷ்டி நிறைவு நாளில், காலை 11 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar