புதுச்சத்திரம்: சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் வரும் 27 ம் தேதி 8 வது ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா நடக்கிறது. புதுச்சத்திரம் அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடம் 8 வது ஆண்டு திருவிழா வரும் 27 ம் தேதி திங்கள்கிழமை நடக்கிறது. விழாவையொட்டி வரும் 26 ம் தேதி இருளமுகம் மற்றும் வானவேடிக்கை நடக்கிறது. 27 ம் தேதி காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5.00 மணிக்கு மயானக்கொள்ளை நடக்கிறது. விழாவையொட்டி 28, 29,30 ஆகிய தேதிகளில் நாடகமும், 31 ம் தேதி மஞ்சள்நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர்.