ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர்கள் விருத்தாசலம் சுபத்ரா, காட்டுமன்னார்கோவில் சீனுவாசன், ஸ்ரீமுஷ்ணம் செயல் அலுவலர் மதனா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை 3 லட்சத்து 60 ஆயிரத்து 429 ரூபாய் ரொக்கம் இருந்தது.