Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்தியமா...உங்களுக்குத்தான் ... திருமலையில் புஷ்பயாக வைபவம்! திருமலையில் புஷ்பயாக வைபவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வளர்ச்சி பணிகள்:7ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 நவ
2011
11:11

பத்தனம்திட்டா:மண்டல கால பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அங்கு பக்தர்களின் வசதிக்காக நடந்து வரும் பணிகளை, 7ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல கால பூஜை வரும் 16ம் தேதி துவங்க உள்ளது. தரிசனத்திற்காக, சபரிமலைக்கு வரவிருக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக நடைபெற்று வரும் பணிகளை, மாவட்ட கலெக்டர் வேணுகோபால் பார்வையிட்டார். பின்னர், நிலக்கல் விருந்தினர் மாளிகையில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், அவர் கலந்து கொண்டார். வடசேரிக்கரா, ரான்னி, பெருநாடு போன்ற பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில், பக்தர்கள் நீராடும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேலிகள் அமைக்க உத்தரவிட்டார். பம்பை உட்பட பல்வேறு இடங்களில், பக்தர்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு விடுதிகள் அருகே செய்யப்படவேண்டிய பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் குப்பைகள், கழிவுகளை கொட்டி பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரும் வாகனங்கள், அவரவர் மாநிலங்களுக்காக நிலக்கல் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தவும், அவ்வாகனங்களில் வரும் பக்தர்களை அங்கிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் மட்டும் பம்பைக்கு கொண்டு சென்று அவர்கள் தரிசனம் முடிந்து திரும்பும்போது, அவர்களை அதேபோல் வாகனங்களில் நிலக்கல் பகுதிக்கு அழைத்து வருவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் அனைத்தையும் வரும், 7ம் தேதிக்குள் முடிக்க கலெக்டர் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar