Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கருட ... திருவள்ளூர் குரு கோவிலில் பாலாபிஷேகம் திருவள்ளூர் குரு கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தவிப்பு.. சுட்டெரிக்கும் வெயிலில் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தவிப்பு.. சுட்டெரிக்கும் வெயிலில் அவதி

பதிவு செய்த நாள்

24 மார்
2017
12:03

ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் இளைப்பாற நிழல் வசதியின்றி தவிக்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர் களும், சனி, ஞாயிறு நாட்ளில் 30 ஆயிரம் பேரும் வருகின்றனர். தற்போது தீவுப்பகுதியான ராமேஸ்வரத்தில் சராசரியாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரதவீதி, சன்னிதி தெரு வழியாக அக்னி தீர்த்த கடலில் நீராடி கோயிலுக்கு செல்கின்றனர். ரதவீதி, சன்னிதி தெரு, அக்னி தீர்த்தம் கடலில் நீராடி கோயிலுக்கு வர 500 மீட்டர் துாரம் பக்தர்கள் நடந்து செல் லும் நிலை உள்ளது. ஆனால், சுட்டெரிக்கும் வெயிலில் வயதான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் நடக்க முடியாமல், ஒதுங்கி நிற்க நிழற்குடை, பந்தல்கள் ஏதும் இல்லாமல் தவிக்கின்றனர். சில சமயம் மயங்கி விழுகின்றனர்.

ஒவ்வொரு கோடை காலத்தி லும் பக்தர்கள் இதுபோல் சிரமப்படுவது தொடர்கிறது. உலக அலவில் பிரசித்திபெற்ற ஆன்மிக தலமான ராமநாத சுவாமி கோயிலை அடிப்படை யாகக் கொண்டு மத்திய அரசு ராமேஸ்வரத்தை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்துள்ளது. ஆனால், இங்கு வரும் பக்தர்களு க்கு கோயில் நிர்வாகம் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளையாவது செய்ய வேண்டும். குறிப்பாக கோடை காலங் களில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்களை பாதுகாக்க நிழல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி, ரதவீதியில் ஏராளமான குடையில் பந்தல் அமைத்தது பக்தர்களிடம் வரவேற்பு பெற்றது. அதுபோல் சுட்டெரிக்கும் வெயிலில் ராமேஸ்வரம் பக்தர்களை பாது காக்க கிழக்கு ரதவீதி, சன்னிதி தெருவில் பிரமாண்ட பந்தல் அமைக்க, கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும், என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar