Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோலோச்சும் முருகன் கோவிலில் ... சுவாமிமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழி மலையில் சூரசம்ஹார விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2011
11:11

வேலாயுதம்பாளையம்: புகழி மலை பாலசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேவர்களை சிறை பிடித்த அசுரர்களை, முருகன் வதம் செய்து தேவர்களை விடுவித்த நிகழ்ச்சியே சூரசம்ஹாரம். கந்த சஷ்டியன்று அனைத்து முருகன் தலங்களிலும் இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா கடந்த 26ம் தேதி துவங்கியவுடன், விரதம் இருப்பவர்களுக்கு விரத காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. 30 ம் தேதி வரை முருகப்பெருமானுக்கு ஸ்வாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது.சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (31 ம் தேதி) காலை 7 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 12 மணிக்கு விஷேச கால சிறப்பு பூஜையாக நடந்த விழாவில் சஷ்டியை முன்னிட்டு உச்சி கணபதி , ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு, பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து புகழி மலை அடிவாரத்தில் மாலை 6 மணிக்கு துவங்கிய சூரசம்ஹாரம் விழாவில், காந்திநகர் விநாயகர் கோவில் கந்தம்பாளையம் பிரிவு, வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டான உள்பட நான்கு இடங்களில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு மயில் வாகனத்தில் முருகப்பெருமானின் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு முருகன், வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar