Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி ... நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நார்த்தாமலை முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி மாரியம்மன் கோவில் தீமிதி விழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அக்னி மாரியம்மன் கோவில் தீமிதி விழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 மார்
2017
12:03

ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. தமிழகத்திலேயே மிகப்பெரிய பூக்குழியாக கூறப்படும், 62 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 12ல் கம்பம் நடப்பட்டு, திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், அக்னி மாரியம்மன் கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கு பால் மற்றும் தீர்த்தங்கள் ஊற்றி வழிபட்டனர். தினமும் இரவு, அலங்கரிக்கப்பட்ட அம்மன், பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, தீ மிதிக்கும் ஆண் பக்தர்களும், பூவாரி போட்டுக் கொள்ளும் பெண் பக்தர்களும், 15 நாட்கள் விரதம் இருப்பதற்காக, மஞ்சள் கயிறு அணிந்து விரதமிருந்து வந்தனர். நேற்று, தமிழகத்திலேயே மிகப்பெரிய பூக்குழியாக கூறப்படும், 62 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்தும், பெண்கள் பூவாரி போட்டும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அக்னிமாரியம்மனை வழிபட்டனர். நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று கிடா வெட்டுதலும், நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ப.வேலூர் டி.எஸ்.பி., சுஜாதா தலைமையில், நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar