Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமிமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம்! மயிலம் சுப்பரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 நவ
2011
11:11

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவில், நேற்று உற்சவர் சண்முக பெருமானுக்கு, 15 வகையிலான மலர்களால் புஷ்பாஞ்சலி நடந்தது.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த மாதம், 27ம் தேதி துவங்கியது. தினசரி புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், சந்தன காப்பு, திரு ஆபரணம், தங்க கவசம் போன்ற அலங்காரங்கள் நடந்தன. மலைக்கோவில் வளாகத்தில் தினசரி மாலை, பக்தி இன்னிசை கச்சேரிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன.கந்த சஷ்டியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில், புஷ்பாஞ்சலி நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை சேலம், கரூர் ஆகிய பகுதிகளிலிருந்து, 15 வகையான மலர்கள் லாரி மூலம் ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.பின்னர் பூக்கூடைகளை முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் தோளில் சுமந்து சரவணபொய்கை, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகப் பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.மாலை 6 மணிக்கு, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.இன்று கந்த சஷ்டி நிறைவு நாளில், காலை 11 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar