அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பங்குனி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2017 05:03
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்திக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி பொங்கலை முன்னிட்டு, தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதானைகள் நடைபெறும். நாடார் உறவின்முறை காரியாலயத்திலிருந்து கொடியுடன், மேள தாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு, கோயிலை அடைந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் விழாவில், எட்டாம் நாள் பொங்கல் பண்டிகை நடைபெறும். அன்று கோயில் முன்பு பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். ஒன்பதாம் விழாவில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த பக்தியுடன் பூக்குழி இறங்குவர். நேர்த்தி கடனாக, 51,101 சட்டிகள் ஏந்தி வருவர். தினமும் இரவு 7 மணிக்கு கோயில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.