Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கபாலீஸ்வரர் கோவில் பங்குனி ... திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயில்யத்தில் ஆழித்தேரோட்டம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
எழுத்தின் அளவு:
ஆயில்யத்தில் ஆழித்தேரோட்டம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

பதிவு செய்த நாள்

30 மார்
2017
10:03

திருவாரூர்: திருவாரூரில், ஆழித் தேரோட்டத்தை, பாரம்பரிய வழக்கப்படி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூரிலுள்ள,தியாகராஜ சுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்க, மிக பழமையான கோவிலாகும். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித் தேர். 1930, மார்ச் 2ல், ஆழித் தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தேரோட்டம் நடத்தப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே தேரோட்டம் நடந்தது; பின், பல காரணங்களால், தேரோட்டம் தடைபட்டது.

பின், 1970ல், தேரோட்டம் மீண்டும் துவங்கியது. பங்குனி உத்திர விழாவின்போது, ஆயில்ய நட்சத்திரத்தில், ஆழித் தேரோட்டம் நடத்தப்படுவது ஐதீகமாகும். ஆயில்யத்தில் ஆழித் தேர் ஓடினால் ஊரும், நாடும் செழிக்கும் என்பது நம்பிக்கை.கடந்த, 1990 - 91ம் ஆண்டுகளில், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடந்தது. அதன்பின், ஆயில்யத்தில் தேர் ஓடவில்லை. இதற்கு, ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் ஓடினால், ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று திடீரென பரவிய கருத்துதான் காரணம் என, கூறப்படுகிறது. இது வதந்தியே தவிர, உண்மை இல்லை என, பக்தர்கள் கூறுகின்றனர்.நடப்பு ஆண்டிற்கான பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த 14ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இந்தாண்டு, பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரம்,வரும் ஏப்ரல், 6ல் வருகிறது.அன்றைய தினம், ஆழித் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும். குறைந்த இடைவெளியில் ஆயில்ய நட்சத்திரம் வருவதாலும், குறிப்பிட்ட நேரத்தில் நிதி திரட்ட முடியாததாலும், ஐதீக முறைப்படி ஆழித் தேரோட்டத்தை நடத்த முடியவில்லை என, கோவில் நிர்வாகத்தினர் சமாளிக்கின்றனர். ஆனால், மே மாதம், ஆழித் தேரோட்டத்தை நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டு இருப்பதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar