Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் திருக்கல்யாணம்: ... ராமேஸ்வரம் கோவிலில் புதிய சிலைகளுக்கு சிறப்பு பூஜை! ராமேஸ்வரம் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பக்தர்களை வரிசைப்படுத்த பெண் ஊழியர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 நவ
2011
10:11

நகரி : திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களை வரிசைப்படுத்த, பெண் ஊழியர்களை நியமிக்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில், நேற்று முன்தினம் பிரதான நுழைவு வாயிலிலிருந்து மூலவர் சன்னிதி வரை, 30 பேர் கொண்ட பெண் ஊழியர் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை, 10.30 முதல் மாலை, 4.30 மணி வரை துணை நிர்வாக அதிகாரி முனிரத்தினம் ரெட்டி, பேபி சரோஜினி மேற்பார்வையில், வரிசையில் நின்ற பக்தர்கøளை ஒழுங்குபடுத்தி, சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய பெண் ஊழியர்கள் உதவினர். இந்த நடைமுறைக்கு, பக்தர்களிடம் வரவேற்பு கிடைத்தால், தொடர்ந்து தினமும் பெண் ஊழியர்களை ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

சன்னிதியில் தகராறு: திருப்பதி திருமலையில், தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், மூலவர் சன்னிதியில் நிற்கும் பக்தர்களை, ஊழியர்கள் பிடித்துத் தள்ளுகின்றனர். சில நேரங்களில், சுவாமி சன்னிதி முன் பக்தர்களுக்கும், தேவஸ்தான ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, ஏராளமான பக்தர்களிடமிருந்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தினமும் புகார்கள் வருகின்றன. இதையடுத்து, பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தினால், அவர்கள் பக்தர்களிடம் இதமான முறையில் பேசி செயல்படுவர் என்ற நோக்கத்துடன், இம்முறையைத் துவக்கியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar