Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூரில் பக்தர்களுக்கு ... சபரிமலைக்கு கேரள அரசின் 600 பஸ்கள் இயக்கப்படும்! சபரிமலைக்கு கேரள அரசின் 600 பஸ்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இதிகாசங்கள், புராணங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2011
11:11

சென்னை : இந்த காலத்தில் இதிகாசங்கள், புராணங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும், என, பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காராநந்தர் பேசினார். பெண் தர்மம் பற்றி, காஞ்சி மகா பெரியவர் கூறிய கருத்துக்களை உள்ளடக்கிய, "பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் என்ற புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நேற்று நடந்தது. இதில், ஸ்ரீ புவவேஸ்வரி அவதூத வித்யா பீடம் பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ சுவாமி ஓங்காராநந்தர் புத்தகத்தை வெளியிட, சாஸ்த்ரா பல்கலை துணைவேந்தர் சேதுராமன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காராநந்தர் பேசியதாவது: நாம் அனைவரும், பெற்ற தாயை வணங்க வேண்டும். ஒரு குழந்தையை நல்ல குணத்துடன் தாய் தான் வளர்க்கிறாள். அந்த நல்ல குழந்தை தான், இந்த நாட்டின் நல்ல பிரதிநிதியாகிறது. நல்ல பிரதிநிதியால் தான், நாடும் வளர்ச்சி பெறும்; சுபிக்ஷம் பெறும். இந்த நாடு சுபிக்ஷம் பெற உதவும் பெண்களை வணங்க வேண்டும். இதில், சுவாமி பரமாத்மானந்தா பேசியதாவது: மக்கள் எல்லா மொழிகளையும் கற்கின்றனர். ஆனால், சமஸ்கிருதம் மட்டும் கற்பதில்லை. பகவத் கீதை, வேதங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. எனவே, அனைவரும் சமஸ்கிருதத்தை கற்க வேண்டும். இந்த காலத்தில் இதிகாசங்கள், புராணங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன. குருகுலக் கல்வியே மறைந்து வருகிறது. இந்நிலை மாற வேண்டும். இவ்வாறு பரமாத்மானந்தா பேசினார். நிகழ்ச்சியில், இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன், மங்கள் தீர்த் எஸ்டேட்ஸ் இயக்குனர் பாலசுப்பிரமணியம், நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar