பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
11:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். பங்குனி மாத பவுர்ணமியையொட்டி, நேற்று காலை, 11:50 மணிக்கு துவங்கி, இன்று (செவ்வாய்) காலை, 11:50 மணிவரை பவுர்ணமி உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல் விடிய, விடிய அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.