Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, ... இளம் பெண் துறவரம்: நெல்லை டவுன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்த கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2011
10:11

உடுமலை : "உடுமலை அருகே கோட்டமங்கலம் வரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்த வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே கோட்டமங்கலத்தில், பழமை வாய்ந்த கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், கமலவல்லித்தாயார், பெருந்தேவி தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ராமானுஜர், ஆதிசேஷப்பெருமான் மற்றும் தும்பிக்கை ஆழ்வார் சன்னதிகள் இருந்தன. 40 ஆண்டுகளுக்கு பின் கோவில் கட்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், கோவில் கட்டப்படாமல், சிலைகள் கிணற்றில் இருந்தது. அதிருப்தியடைந்த பக்தர்கள் கோவில் அருகில் குடில் அமைத்து சிலைகளை வைத்து பூஜை செய்தனர். 2001ம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேக பணிகளுக்கு குழு அமைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்த முயற்சித்த நிலையில், இந்து அறநிலையத்துறையினர் முறையாக அனுமதி வழங்காததால், கும்பாபிஷேகம் தடை பட்டது. புதுப்பிக்கப்பட்ட கோவில் மற்றும் சிலைகள் பராமரிப்பின்றி சிதிலமடையத்துவங்கின. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கோவிலில், திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த கடந்த ஆண்டு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதற்கட்டமாக கடந்தாண்டு ஆக.,29ம் தேதி கருடகம்பம் மாற்றியமைப்பதற்காக சிறப்பு பூஜைகள் நடந்தன. கருவறைக்கு நேர் எதிராக கருட கம்பம் மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதனையடுத்து, கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. "கருட கம்பம் மாற்றும் பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியுள்ளது. இதனால், கோவில் மீண்டும் பொலிவிழந்து காணப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar