பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
12:04
திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவிலில், சித்திரை திருவிழாவில், நேற்று, தேரோட்டம் நடந்தது.அதில், 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். திருநீர்மலைரங்கநாத பெருமாள் கோவிலில், சித்திரை திருவிழா நடந்து வருகிறது. ஏழாம் நாளான நேற்று, திருத்தேரோட்டம் நடந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், காலை, 7:40 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து தேர் இழுத்தனர். பகல், 11:30 மணிக்கு கோவிலை, தேர் சென்றடைந்தது. இதில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியின் அருளை பெற்றனர். திருவிழாவின், எட்டாம் நாளான இன்று, பல்லக்கு, திருமஞ்சனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.