பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
01:04
ஆர்.கே.பேட்டை: சகுனியின் சூதில், நாட்டையும், சொத்துக்களையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள், 18ம் நாள் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடினர்.இதை தொடர்ந்து, தர்மராஜா, நேற்று முன்தினம், பட்டம் சூடியதும், மக்களை சந்திக்க, நகர்வலம் வந்தார். பகுதிவாசிகள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ஆர்.கே .பே ட்டை , திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, 15 நாட்களாக நடந்து வந்தது. சகுனியின் சூதில், நாட்டை இழந்து, காட்டில் மறைந்து வாழ்ந்து வந்த பாண்டவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குருஷேத்திர போர்க்களத்தில் துரியோதனனை வீழ்த்தி, வெற்றி வாகை சூடினர். இதை தொடர்ந்து, நே ற்று முன்தினம், தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. வனவாசம் முடிந்து மீண்டும் ஆட்சியை பிடித்த பஞ்ச பாண்டவர்களுக்கு, சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டது. ஆட்சியை பிடித்த முதல் நாளிலேயே, மக்களை சந்திக்க தர்மராஜா, நேற்று முன்தினம் இரவு, நகர் வலம் எழுந்தருளினார். திரவுபதியம்மனுடன், மலர் அலங்காரத்தில் உலா வந்த தர்மராஜாவுக்கு, பகுதிவாசிகள், தீபாராதனையுடன், வரவேற்பு அளித்தனர்.