Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆர்.கே.பேட்டையில் ஆட்சி மாற்றம்? ... குளம் நிரம்புவதற்கு என்ன தான் வழி? குளம் நிரம்புவதற்கு என்ன தான் வழி?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதமடைந்த திருப்புல்லாணி சக்கரதீர்த்தக்குளம்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
சேதமடைந்த திருப்புல்லாணி சக்கரதீர்த்தக்குளம்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

19 ஏப்
2017
02:04

கீழக்கரை: திருப்புல்லாணி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள சக்கர தீர்த்தக் குளத்தின் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்துள்ளது. மழை நேரங்களில் குளத்தில் கழிவு நீர் கலந்து வருகிறது. குளத்தை சீரமைக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் கோயில் 44வது திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயன ராமர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் கோயில் முன்புறமுள்ள சக்கர தீர்த்தக்குளத்தில் புனித நீராடி விட்டு கோயிலுக்குள் செல்வார்கள். சக்கரத்தீர்த்தக்குளம் ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.

1999 ல் கலெக்டராக இருந்த விஜயகுமார் முயற்சியால், குளம் முழுவதுமாக துார்வாரப்பட்டு, வெளியில் உள்ள மண், கழிவு நீர் குளத்திற்குள் செல்லாதவாறு, 12 அடி உயர தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. கடலுக்கு வீணாக செல்லும் மழைநீரை தடுத்து, பெரிய குழாய்கள் மூலம் தீர்த்தக்குளத்தில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது. கோடையிலும் வற்றாமல், தீர்த்தக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு, தீர்த்தக்குளத்தின் வடக்குப்பகுதி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து, மணணில் புதைந்தது. இதன் காரணமாக மழைகாலங்களில் கழிவுநீரும் தீர்த்தக்குளத்தில் வந்து கலக்கும் நிலையில் உள்ளது. புதியதாக தடுப்புச்சுவர் எழுப்பிடவும், பலமிழந்த சுவர்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரியில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் மூன்று நாள் உபன்யாசம் இன்று (14ம் தேதி) மாலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar