திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 90 லட்சம் ரூபாயை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதம்தோறும் பவுர்ணமி முடிந்ததும், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக, 90 லட்சம் ரூபாய், 265 கிராம் தங்கம், 741கிராம் வெள்ளி இருந்தது.