பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
11:04
ஸ்ரீபெரும்புதுார் : ஆதிகேசவ பெருமாள் பிரம்மோற்சவ விழாவின், ஆறாவது நாளான நேற்று, வன விஹாரம் புறப்பாடு நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இங்கு, ராமானுஜரின், 1,000வது ஆண்டு விழா, 22ம் தேதி முதல், மே 1 வரை விமரிசையாக நடைபெற உள்ளது. அதற்கு முன், ஆதிகேசவ பெருமாள் பிரம்மோற்சவ விழா, 12ம் தேதி துவங்கியது. விழாவின், ஆறாவது நாளான நேற்று காலை, ஆதிகேசவ பெருமாளுக்கு வன விஹாரம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மாலையில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர், வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.