Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மோகனூர் மாரியம்மன் கோவில் விழா ... சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் டிக்கெட் வசூலில் பணியாளர்கள் கொள்ளை
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் டிக்கெட் வசூலில் பணியாளர்கள் கொள்ளை

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
11:04

அழகர்கோவில்:அழகர்கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ் மற்றும் நூபுர கங்கை நுழைவு கட்டண டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள், சோலைமலை முருகனை தரிசிக்கவும், நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடவும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். பெருமாளை தரிசித்த பின் மலை மீதுள்ள முருகனை தரிசிக்க கோயில் நிர்வாகம் மூலம் இயக்கப்படும் பஸ்சில் பக்தர்கள் செல்கின்றனர்.

பஸ்சில் செல்ல தலா 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குடும்பத்துடன் சென்றால், ஒரே டிக்கெட்டில் எண்ணிக்கையை எழுதிகொடுத்து மொத்த தொகையையும் வசூலிக்கின்றனர். ஆனால், கோயில் நிர்வாகத்திடம் கணக்கு காண்பிக்கும்போது ஒருவர் மட்டும் எனக்கூறி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். சில பணியாளர்கள் தொடர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

அதுபோல் மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் குளிக்க 15 ரூபாய் கட்டணம். இங்கேயும் ஒருவர் மட்டும் என்றுக்கூறி பணியாளர்களில் சிலர் கொள்ளை அடிக்கின்றனர். இதனால் நிர்வாகத்திற்கு தினமும் பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கோயில் கண்காணிப்பிற்கு உள்துறை, அலுவலகம், வெளி நிர்வாக பணிகள் என 3 கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இந்த வசூல் கொள்ளையை வெளி நிர்வாகப் பணிகளுக்கான கண்காணிப்பாளர் தான் விசாரிக்க வேண்டும். ஆனால் அவர் கண்டு கொள்ளாததால் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன. நிர்வாக அதிகாரி மாரிமுத்து அவ்வப்போது டிக்கெட்டுகளை பரிசோதித்து முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிர்வாக அதிகாரி கூறுகையில், பணியாளர்கள் மீதான புகார் உறுதிசெய்யப்பட்டால் கடும் தண்டனை விதிப்பதோடு, பல மடங்கு அபராதம் விதிக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar