மேலுார், மேலுார் அருகே வெள்ளலுார் கிராம மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏழை காத்தம்மன் கோயில் வீடு மற்றும் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சித்திரைப்பூ கண்மாயில் கரைத்தனர். அரிசி, பாசிப்பயறு, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டைகளாக பிடித்தனர். அதை அதிகாலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விருந்தோம்பல் செய்தனர்.