பதிவு செய்த நாள்
15
மே
2017
12:05
ஆத்தூர்: விநாயகபுரம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் அடுத்த, விநாயகபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்த சித்தி விநாயகர் கோவில் அகற்றப்பட்டு, அச்சிலை, விநாயகபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வைத்து வழிபாடு செய்தனர்.
அங்கு, சித்தி விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டு, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை ஆகியவை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம் முடிந்து, கடம் புறப்பாடாகி, 8:30 மணிக்கு மூலவர் சித்தி விநாயகர், பரிவார தெய்வங்கள், கோபுரங்களில், சிவாச்சாரியார்கள், புனிதநீர் ஊற்றி கும்பாபி?ஷகம் நடத்தி வைத்தனர். இதில், ஆத்தூர், நரசிங்கபுரம், விநாயகபுரம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.