கிருஷ்ணராயபுரம்: கம்மநல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, கம்ம நல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கோடை வெப்பத்தை குறைக்கும் வகையில், பக்தர்கள் சார்பில் நேற்று காலை, 9:25 மணியளவில் மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மக்கள், தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.