பதிவு செய்த நாள்
15
மே
2017
01:05
விழுப்புரம்: மழை வேண்டி, வைகுண்ட வாச பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் மழை வேண்டிநேற்று காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை, சிறப்பு பூஜைகள் நடந்தது. வாசு பட்டாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் முன்னாள் சேர்மன் பாஸ்கரன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பசுபதி, கூட்டுறவு வங்கி தலைவர் குருநாதன், எம்.ஜி.ஆர்., மன்ற தனுசு, ஜானகிராமன், முன்னாள் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் செந்தில், ராமதாஸ், அபிராமன், ரவி சக்திவேல், ராதாகிருஷ்ணன், கலுவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.