பதிவு செய்த நாள்
14
நவ
2011
10:11
திரிசூலம்:சவுதி அரேபியாவிற்கு, ஹஜ் யாத்திரை சென்ற நல்லெண்ணக் குழுவைச் சேர்ந்த சிலர், நேற்று சென்னை திரும்பினர்.சவுதி அரேபியாவிற்கு, ஆண்டுதோறும் நல்லெண்ணக் குழு அடிப்படையில் ஹஜ் யாத்திரைக்குச் செல்வது வழக்கம் . இந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து நல்லெண்ணக் குழுவைச் சேர்ந்த 60 பேர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழகத் தலைவர் காதர்மொய்தீன் தலைமையில், ஹஜ் யாத்திரை சென்றனர்.இந்நிலையில், இக்குழு, நேற்று சவுதியில் இருந்து விமானம் மூலம், டில்லி வந்தது. இதில், காதர்மொய்தீன் உள்ளிட்ட சிலர், டில்லியில் இருந்து விமானம் மூலம், நேற்று சென்னை வந்தனர். அப்போது, விமான நிலையத்தில், காதர்மொய்தீன் கூறியதாவது,"சவுதி அரேபியாவில், இந்தியக் குழுவிற்கு சிறப்பான மரியாதை கொடுக்கப்பட்டது. சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அராபாத்திற்குச் செல்ல, மெட்ரோ ரயில் வசதி செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோர், இந்த ரயில் வசதியை பயன்படுத்தினர் என்றார்.