பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது. இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் உள் புறப்பாடு நடந்தது. நேற்று (6ம் தேதி) அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்து, காலை 7:30 மணிக்கு மேல் உற்சவர் திரிபுரசம்ஹாரமூர்த்தி திருத்தேர் பவனியில் வடம் பிடித்தல் துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இரவு 7:00 மணிக்கு சரநாராயண பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், திரிபுரசம்ஹாரமூர்த்தி முப்புரமெரித்த காட்சி ஐதீக முறைப்படி நடந்தது.