பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
03:06
இன்று மதுக்கடைகள் பெருகியுள்ளது. அது வாழும் காலத்தில் மட்டுமல்ல,வாழ்க்கைக்கு பிறகும் கடும் துயரங்களைத் தரும்.ஒருமுறை, நாயகத்திடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். “இறை துாதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,” என்றார். அவரிடம் நாயகம், “அந்த மதுவில் போதை இருக்கிறதா?” என்றார். ’ஆம்’ எனபதிலளித்த தோழரிடம், “அப்படியானால், நீங்கள்அதனைக் குடிக்கக்கூடாது,”என்றார். “சரி...நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,” என்று தோழர் சொன்னதற்கு, “அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,” என்றார் நாயகம். குடிப்பவர்களுடன் சண்டை போட்டாவது அவர்களைத் திருத்த வேண்டும் என்பது நாயகத்தின் கொள்கை.
இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:15 மணி.