Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி ... திருத்தணி விஜயராகவ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா திருத்தணி விஜயராகவ பெருமாள் கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தி ‘மழை’ பொழியப்பொழிய ஈஸ்வரன் கோவில் தேர் பவனி
எழுத்தின் அளவு:
பக்தி ‘மழை’ பொழியப்பொழிய ஈஸ்வரன் கோவில் தேர் பவனி

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2017
10:06

திருப்பூர் : துõறல் மழை பெய்து கொண்டிருக்க, பக்தர்கள் புடைசூழ,  ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர்.

நேற்று முன்தினம் இரவு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, அதிகாலை விஸ்வேஸ்வர சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வீரராக வப் பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத் தில் திருத்தேரில் எழுந்தருளினர். மாலை, 4:20க்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ‘ஓம் நமசிவாயா’, ‘தென்நாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’ என்ற கோஷங்கள் முழங்கியபடி, பக்தர்கள் சங்கிலி வடம் பிடித்து, திருத்தேரை இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் அசைந் தாடிய தேரில், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ விசாலாட்சியம்மன், சுப்ர மணியர் ஆகியோர், சோமாஸ் கந்தர் ரூபத்தில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம், அர்த்த சாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், சிவ பூத கண வாத்திமான, கயிலாய வாத்தியம், இசைத்தனர். திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் வேடம் அணிந்து வந்த குழந்தைகள்,  தேருக்கு முன்பு அணிவகுத்து சென்றனர். பெண்களின் கும்மி, ஒயிலாட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. தேருக்கு முன்பு, விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தராஜா ஆகியோர் எழுந்தருளிய, சிறிய தேரை பெண்கள், குழந்தைகள் இழுத்து சென்றனர். தேருக்கு முன்பும், தேர் வீதிகளில் இரு புறமும் காத்திருந்து, பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று மதியம் மழை பெய்த நிலையில், தேரோட்டத்தின் போது, துõறல் மழை பொழிந்து கொண்டிருக்க, பக்தர்களின் பக்தி கோஷம், சிவ கண வாத்தியங்கள் அதிர, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இன்று மாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar