மயிலம்: மயிலம் முருகர் கோவிலில், வைகாசி விசாகத் திருவிழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில், வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், மூலவர், நவகிரக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், தங்க கவச அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.விழாவை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் கிரிவல நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.