’இந்த உலகில் எத்தனை சோதனைகளை அனுபவிக்கிறேன். யா அல்லாஹ்! இதில் இருந்து எனக்கு விடுதலை கிடையாதா?’ என்று கதறிக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை வரலாற்றை அலசினால், அவர்கள் பெற்றவர்களைக் கவனிக்காதவர்களாகத் தான் இருப்பார்கள். மரணத்துக்கு முன் தண்டனை அனுபவிப்பவர்களைப் பற்றி நபிகள் நாயகம் கூறும் போது, “தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,” என்கிறார். குர்ஆனில், “தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,” என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே பெற்றவர்களுக்கு சேவை செய்வதை நமது கட்டாயக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:44 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்:அதிகாலை 4:15 மணி.