Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடவாசல் சற்குணேஸ்வரர் கோயில் ... பாலமேடு மந்தையம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செய்யாற்றில் 15 கிராம கோவில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வார் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
01:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், 15 கிராமங்களிலிருந்து பங்கேற்கும் கருட சேவை பெருவிழா, நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது.

வைணவ நெறியை பின்பற்றி, வைணவத்திற்கு பெருமை சேர்த்த நம்மாழ்வாரை, அவதார நாளாக கொண்டாடும் விதமாக, 15 கிராமங்களில் உள்ள பெருமாள்கள், ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் கருட சேவை பெருவிழா செய்யாற்றின் பெருநகர் பகுதியில் ஆண்டுதோறும், வைகாசி விசாகத்தின் மறுநாள் நடந்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு கருட சேவை உற்சவம் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் நேற்று அதிகாலை, 3:00 மணி வரை நடந்தது. இதில், கூழமந்தல் பேசும் பெருமாள், பெருநகர் வரதராஜ பெருமாள், மாணாம்பதி சீனிவாச பெருமாள், தண்டரை லட்சுமி நாராயணப்பெருமாள், தேசூர் புண்டரி காட்சிப்பெருமாள், இளநீர் குன்றம் வைகுண்ட சீனிவாச பெருமாள், சேத்துப்பட்டு கல்யாண வெங்கடேச பெருமாள், சோழவரம் காரிய மாணிக்கப்பெருமாள், இளநகர் சீனிவாசப்பெருமாள், கூழமந்தல் பெண்ணை வெங்கடசேப்பெருமாள், தேத்துறை சீனுவாச பெருமாள், செல்லப்பெரும்புலிமேடு வெங்கடேச பெருமாள், மாங்கால் வெங்கடேச பெருமாள், மடிப்பாக்கம் சீனுவாச பெருமாள் ஆகியோர் மேள தாளத்துடன் வாண வேடிக்கையுடன் கருட வாகனத்திலிருந்து இறங்கி, செய்யாற்றில் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அங்கு நம்மாழ்வார் எழுந்தருளி, அனைத்து சுவாமிகளுக்கும், மாலை மரியாதை செய்தார். பின்னர் தனித்தனியாக மங்களாசனம் செய்தனர். தீபாராதனை நடந்த பின், சுவாமிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களுக்கு புறப்பட்டு சென்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar