Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கெங்கபுரம் வரதராஜபெருமாள் கோவில் ... துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை துரியோதனன் படுகளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
12:06

வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் படுமோசமாக உள்ளதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்து அமைந்துள்ளது வல்லக்கோட்டை ஊராட்சி. இங்கு, பிரசித்தி பெற்ற வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், அருண கிரிநாதர் திருப்புகழ் பாடிய சிறப்பும் உள்ளது. தற்போது இந்த கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும் ஏராளமானோர் வந்து வழிபடுகின்றனர்.

இந்நிலையில், இந்த கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு, குளக்கரை தெரு, சிவன்கோவில் தெரு, கோவில் எதிரே உள்ள சாலை ஆகிய நான்கு சாலைகளும் பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை நீர், மேற்கண்ட சாலை பள்ளங்களில் தேங்கி நிற்கின்றன. இதனால், பக்தர்கள் அதில் பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் மொய்ப்பதால், அங்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவிலுக்கு செல்லும் இந்த சாலைகளும் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோவில் நிர்வாகத்தினருக்கும், ஊராட்சி நிர்வாகத்தினருக்கும் இடையேயான மோதல் காரணமாக, பல ஆண்டுகளாக, இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமவாசி ஒருவர், வல்லக்கோட்டை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar