Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாப சுவாமி கோவிலில் ஜனவரியில் ... அய்யப்ப பக்தர்கள் வேஷ்டி, துளசி மாலை விலை 10 சதவீதம் உயர்வு! அய்யப்ப பக்தர்கள் வேஷ்டி, துளசி மாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2011
11:11

சபரிமலை: மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை மாலையில் 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டாலும் காலையிலேயே சன்னிதானத்தில் கூட்டம் அலைமோதியது.நாளை காலை முதல், மண்டல கால பூஜைகள் துவங்கும். புதிய மேல்சாந்திகள் இன்று பதவியேற்பர்.கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரஜோதி உற்சவங்கள், நவ., 16ம் தேதி முதல், ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறும். இதில், மண்டல கால உற்சவத்திற்காக அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். தொடர்ந்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மேல்சாந்தியாக, பாலமுரளி பொறுப்பேற்கும் நிகழ்வுகள் துவங்கும். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவருக்கு, தந்திரி, அபிஷேகம் செய்விப்பார். பின் அவரை தந்திரி, சன்னிதிக்கு அழைத்துச் சென்று, அய்யப்பனின் மூலமந்திரம் காதில் ஓதுவார்.அதேபோல், மாளிகைப்புறத்தம்மன் சன்னிதியில் ஓராண்டு காலம் பணியாற்ற புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஈசுவரன் நம்பூதிரிக்கும், இதே போன்ற சடங்குகள் நடத்தப்படும். கார்த்திகை மாதம் முதல் தேதியான, நாளை காலை முதல், அவர்கள் தங்கள் சன்னிதிகளில் மேல்சாந்திக்கான பணிகளை துவக்குவர்.பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில், நடை, கூடுதல் நேரம் திறந்திருக்கும். பூஜை, பிரசாதங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடிந்து பக்தர்கள் விரைவாகவும், எளிதாகவும் பம்பைக்கு திரும்ப வசதியாக, சன்னிதானத்திற்கு பின்புறம் பெய்லி பாலம் திறக்கப்பட்டுள்ளது. அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை, பக்தர்கள் வாங்குவதற்கு வசதியாக, கூடுதல் கவுன்டர்கள் செயல்படும்.

சபரிமலையில் நாளை!

காலை3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்ய தரிசனம்
3.10: கணபதி ஹோமம்
3.15-7.00: நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00-1.00: நெய் அபிஷேகம்

பகல் 1.30: உச்ச பூஜை
1.45: நடை அடைப்பு
மாலை3.30: நடை திறப்பு6.30: தீபாராதனை
இரவு7.00: புஷ்பாபிஷேகம்
10.30:அத்தாழ பூஜை

11.20: ஹரிவராசனம்
11.30: நடை அடைப்பு.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar