Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தெப்பக்குளம் சீரமைப்பு பணியில் ... சபரி மலையில் நாளை! சபரி மலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களைகட்டுகிறது கன்னியாகுமரி குவிந்தனர் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 நவ
2011
12:11

கன்னியாகுமரி : சபரிமலை சீசன் துவங்கியதையடுத்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிய துவங்கியுள்ளனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் துவங்கியதையடுத்து சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். நேற்று காலை முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வழிபட்டுவிட்டு மாலை அணிந்து விரதம் துவங்கினர். சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்ல தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கும் வந்து செல்வது வழக்கம். ராமேஸ்வரம், மதுரை, திருச்செந்தூர் என்று புனித தலங்களை தரிக்கும் பக்தர்கள் சர்வதேச சுற்றுலாதலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கும் கன்னியாகுமரிக்கும் வந்து செல்வது வழக்கம்.

பஸ், கார், வேன் மூலம் வரும் பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை தரிசனம் செய்துவிட்டு சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்திமண்டபம், காமராஜர் மண்டபம், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை தரிசித்து செல்வார்கள். இப்படி குமரிக்கு வரும் பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து வீட்டிற்கு தேவையான துணிகள், எலெக்ட்ராணிக் பொருட்கள், கடல் சிப்பிகள் போன்ற பல்வேறு பொருட்களை வாங்கி செல்வதால் வியாபாரமும் களைகட்டும். ஆண்டுதோறும் நவம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி மாதம் 20ம் தேதிவரை கன்னியாகுமரியில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் சீசனாகும். இந்த சீசனில் கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் பண்டிகை, அரையாண்டு விடுமுறை என்று விடுமுறை மற்றும் பண்டிகை காலங்கள் தொடர்ச்சியாக வருவதால் ஆண்டுதோறும் இந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வதாக சுற்றுலா துறை சம்பந்தப்பட்ட கணக்குகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி பஞ்., நிர்வாகம் சார்பில் 60 நாட்களுக்கு தற்காலிக சீசன் கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது 250 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் வியாபாரிகள் குமரியில் குவிந்துள்ளனர். மேலும் கடற்கரை சாலை, சன்னிதி தெரு, காமராஜர் மண்டப சாலை உள்ளிட்ட இடங்களில் ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது: நாங்கள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வியாபாரம் செய்ய கன்னியாகுமரி வருவோம். கடந்த ஆண்டு சீசன் வியாபாரம் நன்கு நடந்தது. இந்த ஆண்டும் வியாபாரம் நன்றாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சபரிமலையில் இந்த ஆண்டு கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் கன்னியாகுமரியில் பொருட்களை வாங்குவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar