Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன்மலை கோவில் திருப்பணி பாலாலயம்! ஆட்கொண்ட விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த கட்டண பார்க்கிங்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2011
12:11

மதுரை:சபரிமலை சீசன் துவங்கியதை முன்னிட்டு, மதுரை வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட பக்தர்களின் வாகனங்களுக்கு எல்லீஸ்நகரில் கட்டண பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.சபரிமலை செல்லும் வழியிலும், சென்ற பிறகும் மதுரை வழியாக பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வரும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதன்காரணமாக, பழங்காநத்தம், ஷாப்பிங் காம்பளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் மற்றும் எல்லீஸ்நகர் ரோட்டில் பக்தர்களின் வாகனங்களை தற்காலிகமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். இது மேலும் நெரிசலுக்கு வழிவகுக்கும். ஆண்டுதோறும் நடக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, எல்லீஸ்நகரில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடங்களில் "பார்க்கிங் செய்ய போலீசார் முயற்சி எடுக்க தினமலர் இதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியது.இதன் எதிரொலியாக, எல்லீஸ்நகர் போலீஸ் அவுட்போஸ்ட் அருகே, கோயில் சார்பில் திருமண மண்டபம் கட்டப்படும் காலி இடத்தில் கட்டண "பார்க்கிங் வசதி நேற்று ஏற்படுத்தப்பட்டது. எட்டு மணி நேரத்திற்கு கட்டணமாக பஸ்சிக்கு ரூ.50, வேனுக்கு ரூ.35, காருக்கு ரூ.20 என நிர்ணயிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும். அதேசமயம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், ""சோதனை அடிப்படையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டணமில்லா பார்க்கிங் வசதிக்கு திட்டமிட்டோம். இதனால் உள்ளூர்காரர்கள் வாகனங்களை பல மணி நேரம் நிறுத்த வாய்ப்புண்டு. இதை தவிர்க்கவே, எட்டு மணி நேரம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தோம். இம்முயற்சிக்கு வரவேற்பு இருக்கும் பட்சத்தில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar