Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் கோவிலில் மாலையணிந்த ... சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுக்கோட்டைகோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2011
12:11

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களில் மாலை அணிந்து விரதம் துவக்குவதற்காக நேற்று அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குவது வழக்கம். இங்கு தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சகணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியை தரிசித்து வருகின்றனர். இவ்வாறு சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் கார்த்திகை மாத முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் துவக்குவது வழக்கம். நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கியுள்ளனர். மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தர்கள் அனைவரும் நேற்று அதிகாலை முதலே கோவில்களில் குவிந்தனர். புதுக்கோட்டை டவுன் சின்னப்பா நகர் ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து ஐயப்ப சுவாமியின் பாத சுவடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட துளசிமணி மாலைகளை "சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷம் உச்சரித்தவாறு ஐயப்ப பக்தர்கள் அணிந்து கொண்டனர். இதுபோன்று தண்டாயுதபாணி திருக்கோவில், சாந்தநாத சுவாமி திருக்கோவில், குமரமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களில் மாலை அணிவதற்காக நேற்று அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் ஐயப்ப சுவாமி குறித்த சரணகோஷம், பக்தி பாடல்கள் ஒலித்தது. ஐயப்ப பக்தர்களை ஈர்க்கும் விதமாக தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் ஐயப்ப சுவாமியின் படம் பூஜிக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar