பழநி: உலகநலன் வேண்டி பழநி முருகன் கோயிலில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, சிறப்பு யாகபூஜையுடன் அன்னாபிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு இருந்தது.
தங்கச்சப்பரத்தில் கும்பகலசங்கள் வைத்து, சிறப்புயாக பூஜை நடந்தது. உச்சி காலத்தில் மூலவருக்கு 108 சங்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வில்வம் கலந்த சுத்த அன்னம், மூலவர் சிரசில் கிரீடமாக சூட்டப்பட்டது. பாதங்களில் அன்னம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (ஜூலை 8ல்) திருஆவினன்குடி கோயிலில் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் மற்றும் அருணகிரி நாதர் விழா நடக்கிறது. ஜூலை 9ல் பெரிய நாயகியம்மன் கோயிலிலும், ஜூலை 10ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெறும்.