மதுரை, மதுரை திருப்பரங்குன்றம் ஆனந்த் நர்சரி, பிரைமரி பள்ளி மறறும் அமிர்த வித்யாலயம் பள்ளி சார்பில் வியாசர் பிறந்த நாளை முன்னிட்டு குருபூர்ணிமா மற்றும் மாத்ரு பூஜை நடந்தது. முதல்வர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். ஏழை மாணவர்களுக்கு உதவும் பொருட்டு மாணவர்களிடம் பிடி அரிசி திட்டம் தொடங்கப்பட்டது. ஆசிரியைகள் வசந்தகுமாரி, விஜி நன்றி கூறினர். சாந்தி மந்திரத்துடன் விழா நிறைவடைந்தது.