பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
01:07
ஊத்துக்கோட்டை: சாய்பாபா சன்னதியில் மூலவர் மற்றும் உற்சவருக்கு நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் தங்களது கைகளால் பாலாபிஷேகம் செய்தனர்.ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது சாய்பாபா சன்னதி. ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஜனைகள் நடைபெறும். இங்கு பக்தர்கள் பங்களிப்புடன், ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலை வாங்கப்பட்டது. நேற்று, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தங்களது கைகளால் மூலவர் மற்றும் உற்சவருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். முன்னதாக பஜனை நிகழ்ச்சி நடந்தது.