Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ... கருங்கல்பாளையம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவில் திருப்பணி அடுத்தாண்டு நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2011
11:11

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் திருப்பணி ஓராண்டில் நிறைவு பெறும், என, சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் வெங்கடாசலம் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர், இக்குழுவின் தலைவர் பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமையில், நேற்று, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர். முதல் கட்டமாக சென்னிமலை வருகை தந்தனர். சென்னிமலை மலைக் கோவிலில் நடக்கும் ஐந்து நிலை ராஜகோபுர பணி உட்பட பல்வேறு திருப்பணிகளை பார்வையிட்டனர். பின் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

குழு தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது: இங்கு ஐந்து கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது இதில் 2.50 கோடி ரூபாய் அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. மீதி 2.50 கோடி ரூபாய் உபதாரர்கள் மூலம் பெறப்பட்டு, திருப்பணி திட்டமிட்டபடி நடந்து வருகிறது. மலைக் கோவிலுக்கு வரும் தார்ச்சாலையை விரிவுபடுத்தி, தடுப்புசுவர் எழுப்பும் திட்டம் ஏதும் இல்லை. பக்தர்கள் கோரிக்கை வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2012க்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின், இக்குழவினர் ஈரோடு புறப்பட்டு சென்றனர். குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் வேளச்சேரி அசோக், ஆம்பூர் அஷ்லாம் பாட்ஷா, புதுக்கோட்டை முத்துகுமரன், திருப்பரம்குன்றம் ராஜா, காங்கேயம் நடராஜ், மொடக்குறிச்சி கிட்டுசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் சண்முகம், சட்டசபை சார்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன், அறநிலையத்துறை இணை கமிஷனர் புகழேந்திரன், உதவி கமிஷனர் தனபாலன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் மணிமேகலை ஆகியோர் வருகை தந்தனர். இக்குழுவினரை, சென்னிமலை யூனியன் தலைவர் கருப்புசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் தெய்வசிகாமணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar