Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ... கருங்கல்பாளையம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவில் திருப்பணி அடுத்தாண்டு நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2011
11:11

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் திருப்பணி ஓராண்டில் நிறைவு பெறும், என, சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் வெங்கடாசலம் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர், இக்குழுவின் தலைவர் பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமையில், நேற்று, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர். முதல் கட்டமாக சென்னிமலை வருகை தந்தனர். சென்னிமலை மலைக் கோவிலில் நடக்கும் ஐந்து நிலை ராஜகோபுர பணி உட்பட பல்வேறு திருப்பணிகளை பார்வையிட்டனர். பின் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

குழு தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது: இங்கு ஐந்து கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது இதில் 2.50 கோடி ரூபாய் அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. மீதி 2.50 கோடி ரூபாய் உபதாரர்கள் மூலம் பெறப்பட்டு, திருப்பணி திட்டமிட்டபடி நடந்து வருகிறது. மலைக் கோவிலுக்கு வரும் தார்ச்சாலையை விரிவுபடுத்தி, தடுப்புசுவர் எழுப்பும் திட்டம் ஏதும் இல்லை. பக்தர்கள் கோரிக்கை வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2012க்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின், இக்குழவினர் ஈரோடு புறப்பட்டு சென்றனர். குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் வேளச்சேரி அசோக், ஆம்பூர் அஷ்லாம் பாட்ஷா, புதுக்கோட்டை முத்துகுமரன், திருப்பரம்குன்றம் ராஜா, காங்கேயம் நடராஜ், மொடக்குறிச்சி கிட்டுசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் சண்முகம், சட்டசபை சார்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன், அறநிலையத்துறை இணை கமிஷனர் புகழேந்திரன், உதவி கமிஷனர் தனபாலன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் மணிமேகலை ஆகியோர் வருகை தந்தனர். இக்குழுவினரை, சென்னிமலை யூனியன் தலைவர் கருப்புசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் தெய்வசிகாமணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar