மணப்பாறை நல்லாண்டவர் கோயிலில் ஆடி வெள்ளிப்பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2017 03:07
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், நல்லாண்டவர் வகையறா கோயில்களில்ஆடி வெள்ளிப் பெருந்திருவிழா வரும் 21ம் தேதி துவங்கி 18.08.2017 வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்
28.07.2017 வெள்ளிக்கிழமை
மங்கல நாள்: வளர்நிலா ஐந்தாம் நாள் - (உத்தரம்) உத்திரம் - கை (அஸ்தம்) விண்மீன்கள் - சித்த அமிர்த ஓகங்கள் கூடிய இறைமங்கல வேளை. நறுமண நீராட்டு: காலை 9.00 மணி உற்சவ மூர்த்தி அருள்மிகு மான்பூண்டி நல்லாண்டவர் மற்றும் அருள்மிகு ஏழுகருப்பண்ணசாமிகளுக்கு நன்னீராட்டு - பேரொளி வழிபாடு. மங்கல இசை: மாலை 6.00 மணி நாகக்குழலிசை நாயகன் ஆண்டவர்கோயில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர். உட்சுற்று உலா : இரவு 7.00 மணி தெய்வத்திருமகன் மான்பூண்டி லெக்கையன் திருத்தேரில் உட்சுற்று உலா யாவருக்கும் இறையமுதம் வழங்கல்.
04.08.2017 வெள்ளிக்கிழமை
மங்கல நாள்: வளர்நிலா 12ம் நாள் - குருகு (மூலம்) விண்மீன் - அமிர்த ஓகவேளை மங்கல நீராட்டு: காலை 9.00 மணி உற்சவ மூர்த்தி அருள்மிகு நல்லாண்டவர் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பண்ணசாமிகளுக்கு மங்கல நீராட்டு- பேரொளி வழிபாடு. பொது விருந்து : பகல் 12.00 மணிக்கு அன்னதானம் மங்கல இசை : மாலை 6.00 மணி மங்கல இசை மைந்தன் ஆண்டவர்கோயில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர். உட்சுற்று உலா : இரவு 7.00 மணி நமது குலதெய்வம் மான்பூண்டி நல்லாண்டவர் திருத்தேரில் உட்சுற்று உலா யாவருக்கும் இறையமுதம் வழங்கல்.
03.08.2017 வியாழக்கிழமை
மங்கல நாள்: வளர்நிலா பதினொன்றாம் நாள் - துளங்கொளி (கேட்டை) விண்மீன் சித்த ஓகம் கூடிய இறைமங்கல வேளை. புனித நீராட்டு: காலை 9.00 மணி உற்சவமூர்த்தி அருள்மிகு மான்பூண்டி லெக்கையன் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பசாமிகளுக்குப் புனித நீராட்டு - பேரொளி வழிபாடு. மங்கல இசை: மாலை 6.00 மணி மங்கல இசை மாமணி ஆண்டவர்கோயில் எம். எஸ். கிருஷ்ணன் குழுவினர். உட்சுற்று உலா: இரவு 7.00 மணி மாமுண்டிச் சீமை மாமன்னன் அருள்மிகு மாமுண்டி நல்லையன் மலர்த்தேரில் உட்சுற்று உலா - அனைவருக்கும் இறையமுதம் (அருட்பிரசாதம்) வழங்கல்.
11.08.2017 வெள்ளிக்கிழமை
மங்கல நாள்: பிறைநிலா நான்காம் நாள் - நாழி (பூரட்டாதி) - முரசு (உத்திரட்டாதி) விண்மீன்கள் - சித்த ஓகம் கூடிய இறைமங்கல வேளை.
சிறப்புமிகு வழிபாடு: காலை 9.00 மணி அருள்மிகு உற்சவமூர்த்தி மாம்பூண்டி லெக்கையன் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பசாமிகளுக்கு நறுமண சிறப்பு நீராட்டு - பேரொளி வழிபாடு.
பொது விருந்து: பகல் 12.00 மணி திருக்கோயில் திருமண மண்டபத்தில் சிறப்புமிகு அன்னதானப் பொதுவிருந்து.
மங்கல இசை: மாலை 6.00 மணி நாகக்குழலிசை நாயகன் ஆண்டவர்கோவில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர்.
கேரள மங்கல இசை: இரவு 8.00 மணி மலையாள நாட்டு மங்கல இசை நாயகன் ஜெண்டை மேளம் கொல்லங்கோடு கு.சசி குழுவினர்.
தமிழ்நாட்டுக் கலைவிழா: இரவு 9.00 மணி விஜய் தொலைக்காட்சி புகழ் சிறப்பு நிலைக் கலைஞர்கள் ஜெயா தொலைக்காட்சி பின்னணிப் பாடகர் தாஸ். மதுரை திருப்பதி ராஜா பி.எஸ்சி., வழங்கும் டுவிஸ்ட் அகாடமிக் குழுவினரின் மாபெரும் பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சி
திருக்கோயில் தெய்வங்கள் திருவீதித் திருஉலா: நள்ளிரவு 2.30 மணி குதிரை வாகனத்தில் குறைகளையும் கோபாலனின் திருவீதி உலா மற்றும் மின்னொளி வீசும் அழகுமிகு அலங்காரப் முத்துப் பல்லக்கில் திருக்கோயில் தெய்வங்களின் ஆலய வெளிச்சுற்று உலா. வானப்பெருவெளியில் காணக்கிடைக்காத வாணவேடிக்கை.
18.08.2017 வெள்ளிக்கிழமை
இனிய நாள்: பிறை நிலா பதினொன்றாம் நாள், சித்த ஓகம், மூதிரை (திருவாதிரை) விண்மீன் கூடிய இறைமங்கல வேளை. நறுமண நீராட்டு : காலை 9.00 மணி அருள்தரும் உற்சவ மூர்த்தி மான்பூண்டி நல்லாண்டவருக்கும் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பண்ண சாமிக்கும் புனிதமிகுப் பொருட்களால் நறுமண நீராட்டு, பேரொளி வழிபாடு. மங்கல இசை: மாலை 6.00 மணி நாகக்குழலிசை நாயகம் மலேசியா புகழ் எம்.எஸ். கே. மருதமுத்து குழுவினர் ஆண்டவர்கோவில் உட்சுற்று உலா :இரவு 7.00 மணி அருள்மிகு உற்சவமூர்த்தி மாமுண்டி லெக்கையன் ஆலய உட்சுற்று இரத உலா. அனைவருக்கும் இறையமுதம் எனும் அருட்பிரசாதம்.
உன்னதமிகு கோகுலாஷ்டமி உறியடித் திருவிழா கலியுகக் கடவுள் கண்ணபிரான் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 14.08.2017 திங்கட்கிழமை பிறைநிலா 8 ஆம் நாள் எனும் அஷ்டமி திதி, அடுப்பு (பரணி) வண்மீன் சித்தஓகம் கூடிய இறையருள் வேளை. மங்கல இசை : மாலை 6.00 மணி நாகக்குழல் நாயகன் ஆண்டவர்கோவில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர் உறியடித்திருவிழா: இரவு 7.00 மணி அருள்மிகு கலியுகக் கண்ணன் பிறந்த நாளில் உறியடித் திருவிழா வழுக்கு மரம் ஏறுதல் கொண்டாட்டம். திருக்கல்யாணம் : இரவு 8.00 மணி தெய்வத்திருமகளிர் பாமா - ருக்மணி ஆகிய இணையர் இருவரையும் ஒரு சேர இறைவன் கண்ணன் மணந்து மகிழும் தெய்வங்களின் திருக்கல்யாண மங்கல விழா, அனைவருக்கும் இறையமுதம்.