விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆடிப்பூர திருக்கல்யாணம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் திருக்கல்யாண உற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சுவாமிகள் தேரோட்டம் நடந்தது. அதையடுத்து, இன்று அதிகாலை 5:00 மணியளவில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.