பதிவு செய்த நாள்
28
ஜூலை
2017
11:07
ஊத்துக்கோட்டை: எல்லையம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி கிராமத்தில் உள்ளது எல்லையம்மன் கோவில். 14ம் தேதி, ஐந்தாம் ஆண்டு தீமிதி திருவிழா காப்பு கட்டி துவங்கியது. முதல் நாள், கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், ஒவ்வொரு நாளும், அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 21ம் தேதி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்திச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.பின், அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. 22ம் தேதி, சறுக்கு மரம் ஏறுதல், அக்னி சட்டி எடுத்து வலம் வருதல் நிகழ்ச்சியும், மாலை, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கடந்த, 25ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.