மலைக்கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதை சீரமைப்பு பணிக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2011 12:11
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் பக்தர்கள் செல்லும் மலைப்பாதை சீரமைக்கும் பணிக்கான சிறப்பு பூஜை இன்று (நவ., 24) நடக்கிறது. காரிமங்கலம் மலைக்கோவிலான ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பிரதோஷம், பவுர்ணமி சிறப்பு நாட்கள் மற்றும் முகூர்த்தி நாட்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் செல்கின்றனர். கடைவீதியிலிருந்து கோவிலுக்கு மலைப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதுடன் படிகட்டுகள் சேதமடைந்து இருந்தது. மேலும் மலைப்பாதையில் நாய், பன்றிகள் போன்றவை எந்நேரமும் சுற்றி திரிந்து வருவதுடன் அப்பகுதியை அசுத்தமாகின. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பொதுமக்கள் அவதிகுள்ளாகினர். டவுன் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்றால் மலைப்பாதை சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படும் என உறுதியளித்த சத்யா அசோக்குமார் வெற்றிபெற்ற பின்பு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். மலைக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு படிக்கட்டுகள் அனைத்தும் தனது சொந்த நிதியிலிருந்து செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான சிறப்பு பூஜை இன்று நடக்கிறது. சேர்மன் சத்யா அசோக்குமார் தலைமை வகித்து பணியை துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை பா.ம.க., நகர செயலாளர் அசோக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.