பதிவு செய்த நாள்
24
நவ
2011
12:11
நாமக்கல்: நரசிம்ம ஸ்வாமி கோவிலில் உள்ள பல்வேறு குறைகளை முழுமையாக களைந்த பின், கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என, ஆன்மிக நண்பர்கள் அமைப்பு சார்பில், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நரசிம்ம ஸ்வாமி, நாமகிரிலட்சுமி தாயார் கோவில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிலில் கோபுரங்கள், துணை கோபுரங்கள், வெளி முகப்பில் உள்ள சிற்பங்கள் உடைந்தும், பெயர்ந்தும், காரை உதிர்ந்தும் காணப்படுகிறது. மேலும், நரசிம்ம ஸ்வாமி பாதம் இருக்கும் சிறிய கோபுரத்தில மேல்கவசம் இல்லாமலும், சுற்றுப்புற சிற்பங்கள் சிதைந்தும் தெரிகிறது. கிருஷ்ணர் சன்னதி மற்றும் லட்சுமி நாராணன் சன்னதியை சுற்றிலும் குப்பைகள், மரங்கள், இரும்பு சாமான்கள் போடப்பட்டு அசுத்தமான நிலையில் கோவில் உள்ளது. இக்குறைகளை முழுமையாக நீக்கிய பின், கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.