Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன் ... திருச்செந்தூர் வரும் பக்தர்களிடம் கொள்ளையர்கள் அட்டகாசம்! திருச்செந்தூர் வரும் பக்தர்களிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவிலில் பிரான்ஸ் நாட்டினர் துலாபார காணிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 நவ
2011
10:11

குருவாயூர் : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 15 பேர், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், துலாபார நேர்த்திக் கடன் செலுத்தினர். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு, இந்து மதத்தினரைத் தவிர, பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும், கோவிலுக்குள் செல்ல சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை கடைபிடித்தால் மட்டுமே, கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 15 பேர், சாய் சஞ்ஜீவினி அறக்கட்டளை நடத்தி வரும் கருத்தரங்கில் கலந்து கொள்ள, இங்கு வந்துள்ளனர். அவர்களிடம், கிருஷ்ணன் கோவிலின் மகிமை, பெருமை குறித்து விளக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நேர்த்திக் கடன் மற்றும் துலாபாரம் பற்றியும் விளக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 15 பேரும், துலாபார நேர்த்திக் கடன் செலுத்த, கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரான்ஸ் குழுவுக்கு, ஜாக்குலின் ஜெரா தலைமை தாங்கினார். அவர்களை, அறக்கட்டளையின் தலைவர் அரிநாராயணன், போலீஸ் டி.எஸ்.பி.சுரேஷ் ஆகியோர், கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். குழுவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்களும், இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும், வேட்டியும், தோளில் துண்டும் மட்டுமே அணிந்து பய பக்தியுடன் காணப்பட்டனர். அவர்கள் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின், அவர்களுக்காக, துலாபாரம் (தராசு) கோவிலின் கிழக்கு பகுதியில் வைக்கப்பட்டது. அனைவரும், கதளி பழத்தை எடைக்கு எடையாக காணிக்கை செலுத்தினர். அவர்களுக்கு, 810 கிலோ எடைக்கு பழங்கள் தேவைப்பட்டன. அதற்காக, அவர்கள் 12 ஆயிரத்து 225 ரூபாயை கோவிலுக்குச் செலுத்தி ரசீது பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 – நமது நிருபர் –பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.ஏகாதசியை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, ரோட்டோரத்தில் மண்ணில் புதைந்து கிடந்த, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த புடைப்பு ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமியின் ஜென்ம தின வைபவத்தை முன்னிட்டு, கோவை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar